கோவை பாரதியார் பல்கலை., வளாகத்தில் புகுந்த யானை கூட்டம் ..!

மருதமலை சாலையில் உள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை யானை கூட்டம் ஒன்று புகுந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டு யானைகள் கூட்டமாக வந்ததால் அச்சமடைந்த மாணவ - மாணவிகள் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள மருதமலை வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்த காட்டு யானைகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துவதும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரமும் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் குடியிருப்புகள் புகுந்து, அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தியது.

இதனிடையே நேற்று (29.09.2022) பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புற வளாகத்துக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர், உடனடியாகவனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வனத்துறையினர் விரட்டும் போதுகாட்டு யானை கூட்டம் திடீரெனபல்கலைகழக வளாகத்துக்குள்ளே மீண்டும் வந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில், காட்டு யானைகள்அங்கும் இங்குமாக ஓடியதால், யானை கூட்டம் வனத்துக்குள் செல்லும்வரைவனத்துறையினர் காத்திருந்தனர்.

மேலும் காட்டு யானைகள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பாரதியார் பல்கலைக்கழக அருகே முகாமிட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, நேற்று இரவு காட்டு யானைகளை வனத்துறையினர், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து காட்டு பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதி பெரும் பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...